'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், இதே கருத்தை வலியுறுத்தி நடிகர் சங்கமும் ஜன., 20-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, எந்தவித கட்சி, அமைப்புகளின் பின்னணி இல்லாமல், ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரையுலகினர் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விஷயத்தில் நடிகர் சங்கமும் களமிறங்க உள்ளது. 20ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடிகர் சங்க துணை தலைவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது... ‛‛ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் சார்பில் நாளை மறுநாள்(ஜன., 20-ம் தேதி) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. சென்னை, திநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்திலேயே இது நடைபெறுகிறது. இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்கேற்பார்கள்'‛ என்றார்.
உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா...? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நடவடிக்கை எதுவும் கிடையாது, இது உணர்வுசார்ந்த போராட்டம், இதில் அனைவரும் பங்கேற்பார்கள் என நம்புகிறோம் என்றார்.