தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது . ஜல்லிக்கட்டிற்காக திரைத்துறையில் உள்ளவர்களும், அரசியல் கட்சியினரும், மாணவர்களும் தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து கொண்டும், பீட்டாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி கொண்டும் வருகிறார்கள் . நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாசும் ஜல்லிக்கட்டை தொடர்ந்து ஆதரித்து கொண்டு இருக்கிறார் . ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தை திருநாளில் ஜல்லிக்கட்டிற்காக "கொம்பு வச்ச சிங்கம்டா..." என்ற பாடல் ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று ஜி.வி.பிரகாஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவு செய்தார். அதில் தான் களத்திலும் இறங்க இருப்பதாகவும் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருக்க போவதாகவும் கூறியிருந்தார்.
இன்று காலை நடிகர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரின் நண்பர்களும் சேலம் ஆத்தூரில் இருக்கும் தலவாய்ப்பட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது....."ஜல்லிக்கட்டிற்கு பீட்டா போட்டு இருக்கும் தடையை நீக்க வேண்டும். பீட்டா மத்திய, மாநில அரசின் இடத்தை பிடிக்க முயற்சி எடுத்து வருகிறது. பீட்டா தடையை நீக்கும் வரை போராட்டாம் நடந்து கொண்டே இருக்கும். பீட்டா பற்றி அறியாமல் பல திரைபிரபலங்கள் அதில் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் நாட்டுமாடு இனங்கள் அழிந்து போய்விடும்" என்றார்.
ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரின் நண்பர்களும் சேலத்தை தொடர்ந்து மதுரை அலங்காநல்லூர் வந்தவர்கள், அங்கும் போராட்டாக்காரர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் செய்தார். ஜல்லிக்கட்டு நடக்கும் வரை இந்த போராட்டம் ஓயாது என்றும் கூறினார் ஜிவி பிரகாஷ்.