ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது ஹாலிவுட்டிலும் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். படங்கள் தவிர சின்னத்திரை தொடரிலும் நடித்து வருகிறார். குவான்டிகோ என்ற தொடரில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ஒரு திரைப்படத்துக்கு நிகராக தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகும் இந்த தொடர் அமெரிக்கா முழுவதும் பிரபலம். பிரியங்கா சோப்ராவும் பிரபலம்.
இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள நியூயார்க்க நகரில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நியூயார்க் நகரில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் படப்பிடிப்பு நடந்தது. மாலில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை பிரியங்கா சோப்ரா துரத்திச் சென்று பிடிக்கிற காட்சிகள் படமாக்கப்பட்டது. பிரியங்கா துள்ளிக்குதித்து ஓடுகிற காட்சி படமானது. அப்போது எதிர்பாராத விதமாக பிரியங்கா தடுமாறி கீழே விழந்தார். இதில் அவரது தலை, கை, காலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்ற டாக்டர்கள் கூறியதைத் தொடர்ந்து பிரியங்கா ஓய்வெடுத்து வருகிறார். படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.