இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், இதயக்கனி, புரட்சித் தலைவர், கொடைவள்ளல் என்றெல்லாம் அவரது ரசிகர்களால் வாயார புகழப்பட்டவர் மறைந்த முதல்வரும் அதிமுக தலைவருமான எம்ஜிஆர். எம்ஜிஆர்-ன் 100வது பிறந்தநாள் நாளை(ஜன., 17-ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதிமுக., கட்சியிலும் சரி, திரையுலகத்திலும் சரி எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட உள்ளனர். குறிப்பாக தமிழ் சினிமா சார்பில் எம்ஜிஆரின் பிறந்தநாளை ஆண்டு முழுக்க கொண்டாட உள்ளனர். அதன் ஒருபகுதியாக நாளை சென்னை அபிராமி தியேட்டரில் எம்ஜிஆர்., நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், நடிகர் சங்கம், கில்டு, பெப்சி உள்ளிட்ட அனைத்தும் சங்கங்களும் இணைந்து இந்த விழாவை நடத்துகிறார்கள். இந்த விழாவை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார். எம்ஜிஆர்., திறந்து வைத்த தியேட்டர் அபிராமி என்பதால் இங்கு விழாவை நடத்துகிறார்கள். தொடர்ந்து எம்ஜிஆர்., நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது. பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து திரையுலகினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.