தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான ‛தங்கல்' படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி கொண்டிருக்கிறது. இதன் சக்சஸ் மீட் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமீர்கான், நான் யாரையும் போட்டியாக நினைத்தது கிடையாது என்று கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் மேலும் கூறுகையில், ‛‛இந்த சினிமாவில் ஷாரூக்கான், சல்மான், அஜ்ய் தேவ்கன், அக்ஷ்ய் குமார், ரன்பீர், ரன்வீர் சிங்... என ஏகப்பட்ட அருமையான நடிகர்கள் இருக்கிறார்கள். சில நடிகர்கள் நடிக்கும் படங்கள் நன்றாக இருந்தால் நான் மிகவும் ரசிப்பேன். உதாரணத்திற்கு சல்மானின் சுல்தான், தபாங் படங்களை ரசித்தேன், அதேப்போன்று சஞ்சய்யின் முன்னாபாய் படமும் என்னை மிகவும் கவர்ந்தது. என்னை சுற்றி இருப்பவர்கள் இதுபோன்று நல்ல படங்களில் நடிக்கும்போது அதுவே எனக்கு உத்வேகத்தையும் தருகிறது. நான் யாரையும் போட்டியாக நினைக்க மாட்டேன், என்னை நானே போட்டியாக கருதுவேன். போட்டி என்பது ஒரு வலுவான வார்த்தை, எனவே நான் ஒரு சிறந்த நடிகனாக இருக்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தற்போது அமீர்கான், ‛தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் அமீர்கானுடன் அமிதாப்பும் நடிக்க உள்ளார். இப்படம் இந்த தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.