ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிறைவாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகிவிட்டார் நடிகர் சஞ்சய் தத். அவரது முதல்படமாக ‛பூமி' படம் வருகிற ஜன., 29-ம் தேதி ஆக்ராவில் பிரமாண்டமாய் துவங்குகிறது. இதில் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளார்கள். சஞ்சய்யின் மனைவி மான்யா தத் படப்பிடிப்பை துவக்கி வைக்க உள்ளார். ‛பூமி' படம் அப்பா - மகள் இடையேயான உறவை சொல்லும் படமாக உருவாக உள்ளது. இதில் சஞ்சய் தத்தின் மகளாக நடிக்க ஆலியா பட்டை கேட்டனர், ஆனால் அவர் மறுத்துவிட்டார். நடிகர் சஞ்சய் தத் நேரடியாக கேட்டும் கூட ஆலியா பிடிவாதமாக நடிக்க மறுத்துவிட்டார். இதனால் அவருக்கு பதிலாக இப்போது சிவாய் படத்தில் நடித்த நடிகை சாயிஷா சைகல் நடிக்க உள்ளார். பூமி படத்தை ஓமங் குமார் இயக்குகிறார், படம் இந்தாண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி வெளியாக உள்ளது.