தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த, 'கோல்டன் குளோப்' விருது வழங்கும் விழாவில், பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை, சமூக வலைத் தளங்களில் 'வைரல்'ஆகியுள்ளது. வழக்கமாக, ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற விருது நிகழ்ச்சிகளில், நடிகையர் அணிந்து வரும் உடைகள், நன்றாக இருக்கிறதா, இல்லையா என விமர்சித்து, வெளிநாட்டு ஊடகங்கள் பட்டியலிடுவது வழக்கம். இதற்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பிரியங்கா அணிந்து வந்த உடை, மிக மோசமான உடைகளுக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆனால், கோல்டன் குளோப் நிகழ்ச்சிக்கு அவர் அணிந்திருந்த, கோல்டன் கலரிலான நீண்ட கவுனுக்கு, ஆதரவும், எதிர்ப்பும் சரிசமமாக கிடைத்துள்ளது. இதனால், இனிமேல் நடக்கும் விருது நிகழ்ச்சிகளுக்கு அணியப் போகும் உடையை தேர்வு செய்வதில், மிகவும் கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளாராம், பிரியங்கா.