டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளத்தில் இருந்து இறக்குமதியான, சுருட்டை முடி அழகி, அனுபமா பரமேஸ்வரனை, கொடி படத்துக்கு பின், ஒரு தமிழ் படத்தில் கூட பார்க்க முடியவில்லை. இதுகுறித்து, கோடம்பாக்கத்தில் விசாரித்தால், அம்மணிக்கு, தமிழ் படங்களில் நடிக்க, அவ்வளவு ஆர்வம் இல்லை என்கின்றனர். அவரது முழு கவனமும், தற்போது தெலுங்கு படங்களில் தான் உள்ளது. ஷதமனம் பவதா என்ற படத்தில், சர்வானந்த் ஜோடியாக நடிக்கிறார். இந்த படம், பொங்கலன்று திரைக்கு வருகிறது. இதுவரை தெலுங்கில், அவர் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இவற்றில், இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இந்நிலையில், ஷதமனம் பவதா படத்தில், முதல் முறையாக, பிரதான ஹீரோயினாக நடித்து உள்ளார். இதுதவிர, எவடு ஒக்கடு என்ற படத்திலும் நடிக்கிறார். இதனால், இப்போதைக்கு தமிழ் படங்கள் வேண்டாமே என, கோலிவுட்டில் இருந்து பேசும் தயாரிப்பாளர்களிடம் உதட்டை பிதுக்குகிறாராம் அனுபமா.