ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் இருந்து இறக்குமதியான, சுருட்டை முடி அழகி, அனுபமா பரமேஸ்வரனை, கொடி படத்துக்கு பின், ஒரு தமிழ் படத்தில் கூட பார்க்க முடியவில்லை. இதுகுறித்து, கோடம்பாக்கத்தில் விசாரித்தால், அம்மணிக்கு, தமிழ் படங்களில் நடிக்க, அவ்வளவு ஆர்வம் இல்லை என்கின்றனர். அவரது முழு கவனமும், தற்போது தெலுங்கு படங்களில் தான் உள்ளது. ஷதமனம் பவதா என்ற படத்தில், சர்வானந்த் ஜோடியாக நடிக்கிறார். இந்த படம், பொங்கலன்று திரைக்கு வருகிறது. இதுவரை தெலுங்கில், அவர் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இவற்றில், இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இந்நிலையில், ஷதமனம் பவதா படத்தில், முதல் முறையாக, பிரதான ஹீரோயினாக நடித்து உள்ளார். இதுதவிர, எவடு ஒக்கடு என்ற படத்திலும் நடிக்கிறார். இதனால், இப்போதைக்கு தமிழ் படங்கள் வேண்டாமே என, கோலிவுட்டில் இருந்து பேசும் தயாரிப்பாளர்களிடம் உதட்டை பிதுக்குகிறாராம் அனுபமா.