அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
ரியாலிட்டி ஷோக்களில் ஜெயிப்பவர்கள் சந்தோஷக்கூத்தாடுவது, தோற்றவர்கள் அழுவது, இடையிடையே கோபித்துக் கொள்வது இவற்றில் பாதிதான் உண்மை, மீதி திட்டமிடப்பட்ட நாடகங்கள் என்பது சமீபகாலமாக வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டான்ஸ் ஷோ நிகழ்ச்சியில் நடிகர் சிம்புவும், நடிகர் பப்லுவும் மோதிக்கொண்டார்கள். அது பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் அது வெறும் செட்அப்தான் என்று நிரூபணமானது.
அதேபோன்று தற்போது இன்னொரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜோடியாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில் காமெடி நடிகர் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் கலந்து கொண்டார்கள், இந்த நிகழ்ச்சியில் தாடி பாலாஜி "என் மனைவியை கடுமையாக திட்டியிருக்கிறேன், அடித்திருக்கிறேன். அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். "மற்றவர்களை சிரிக்க வைச்சிட்டு என்னை மட்டும் அழவைத்தார்" என்று அவரது மனைவி கதறி அழுதார். காமெடி நடிகனுக்குள் இத்தனை கொடூர மனிதனா என்று நடுவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் இது எல்லாமே நாடகம்தான் என்பதை போட்டு உடைத்திருக்கிறார் பாலாஜி.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். எனக்காக என் மனைவி அவுங்க குடும்பத்தையே வேண்டாமுன்னு சொல்லிட்டு வந்தவங்க. அவரைப்போய் நான் அடிப்பதாவது, கொடுமைப்படுத்துவதாவது நான் என் மனைவி மகள் எப்போதும் சந்தோஷமாக இருக்கோம். அந்த ஷோவுல நடந்த கலாட்டா அது, ரியாலிட்டி ஷோல இதெல்லாம் சகஜம்" என்று கூறியிருக்கிறார் தாடிபாலாஜி.