பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, தனுஷ் நாயகனாக நடித்த '3' படத்தில் தான் ரஜினிகாந்தின் உறவினரான அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். அடுத்து தனுஷ் தயாரித்த படங்களிலும், தனுஷ் நடித்த சில படங்களிலும் ஆஸ்தான இசையமைப்பாளராகவே அனிருத் மாறிப் போனார்.
ஆனால், ஒரே ஒரு 'பீப்' பாடலால் அனிருத்தை ரஜினிகாந்தின் குடும்பம் மொத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டது. 'பீப்' பாடல் சர்ச்சை வந்த போதே அனிருத் பற்றிய தன்னுடைய கோபத்தை ரஜினிகாந்த் அனிருத்தின் குடும்பத்தாரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. அதற்கேற்றபடி அதற்குப் பிறகு தனுஷ் நடித்த 'கொடி' படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணியாற்றினார். தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் 'பவர் பாண்டி' படத்தில் ஷான் ரோல்டன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அடுத்து தனுஷ் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்திற்கும் ஷான் ரோல்டனே இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார். இப்போது தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 'மாரியப்பன்' படத்திற்கும் ஷான் ரோல்டனே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ரஜினிகாந்த்தின் இரு மகள்கள் இயக்கும் படத்திலும் தனுஷ் இயக்கும் படத்திலும் ஷான் ரோல்டன்தான் இசையமைப்பாளர். ஆக, அனிருத்தை ரஜினிகாந்தின் குடும்பத்தினர் மொத்தமாக ஒதுக்கியுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இதனால் தனுஷ் - அனிருத் இடையிலான பிரிவு நிரந்தரமாகிவிட்டது என்றே திரையுலகத்தினர் கருதுகிறார்கள்.