இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
முன்னணி நடிகர்களைப் பொறுத்தவரை தாங்கள் நடிக்கும் படங்களில் தங்களுக்கு வேண்டப்பட்ட நடிகர் -நடிகைகள், டெக்னீசியன்களுக்கு சிபாரிசு செய்வதுண்டு. ஆனால் இந்த விசயத்தில் முற்றிலும் மாறுபட்டவராக இருந்து வருகிறார் அஜித். தனக்கு யாரும் சிபாரிசு செய்வதை விரும்பாத அவர், தனது படங்களில் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்வதையும் விரும்புவதில்லையாம்.
இதுபற்றி அஜித்தின் நட்பு வட்டாரத்தினர் கூறுகையில், அஜித்தின் ஆரம்ப காலத்திலேயே நாங்கள் அவருடன் நடித்திருக்கிறோம். ஆனால் ஒருகட்டத்தில் அவர் பெரிய ஹீரோவாகி விட்டார். இருப்பினும், நாங்கள் அவர் வளர்ந்த பிறகு அவரது படங்களில் இடம்பெறவில்லை. அவரிடம் சிபாரிசு கேட்டால், மறுத்து விடுவார். அதோடு, ஒரு படத்தின் கதையை முடிவு செய்யும் டைரக்டருக்குதான் அந்த கதையில் யார் யாரை நடிக்க வைக்க வேண்டும் என்பது தெரியும். அதனால் அதை அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.
மேலும், நான் எனக்கு வேண்டப்பட்டவர்களை நடிக்க வைக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னால், எனக்காக அதை செய்வார். ஆனால் கதை கெட்டுப்போய் விடும். அதனால் எப்போதுமே நான் ஒரு நடிகனாக மட்டுமே இருந்து விடுகிறேன். டைரக்டர்கள் விசயத்தில் நான் தலையிடுவதே இல்லை என்கிறாராம்.
அஜித்தின் இந்த குணம் தெரிந்த அவரது நீண்டகால சினிமா நண்பர்கள், அவருடனான நட்பை தொடர்ந்தபோதும் சிபாரிசு பற்றி வாய் திறப்பதே இல்லையாம்.