ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெங்கட் பிரபுவை இயக்குநராக அடையாளம் காட்டிய சென்னை 28 படம், அவருக்கு மட்டுமல்ல, அந்தப்படத்தில் நடித்த பலருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்தி தந்தது. அதில் முக்கியமானவர் மிர்ச்சி சிவா. அந்தப்படத்திற்கு பிறகு சரோஜா, தமிழ்படம், கலகலப்பு, தில்லு முல்லு, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்தவர், இப்போது சென்னை 28_II படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதிலும் சிவாவின் நடிப்பிற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று சிவாவுக்கு பிறந்தநாள், இந்த பிறந்தநாளை சென்னை 28_II படத்தின் வெற்றியோடு கொண்டாடி வருகிறார் மிர்ச்சி சிவா.
இதுப்பற்றி சிவாவிடம் பேசியபோது அவர் கூறியதாவது... ‛‛முதலில் என்னை நடிகனாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. யாருடைய பாணியையும் பின்பற்றாமல் எனக்கென்று தனி ஸ்டைல் அமைத்து நடிக்கிறேன். அடுத்தவர்களை சந்தோஷமாக வைத்து கொண்டால் நாமும் சந்தோஷமாக இருக்கலாம், எனவே முடிந்தவரை எல்லோரையும் சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள்'' என்றார்.