டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் ஜெயம் ரவி நடித்த தனிஒருவன் படத்தின் வாயிலாக கோலிவுட்டிற்கு திரும்பிய அரவிந்த் சாமிக்கு அப்படம் திருப்புமுனையாக அமைந்தது. தனிஒருவன், படத்தில் வில்லத்தனமான ஹீரோவாக மிரட்டிய அரவிந்த் சாமி தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடிக்கும் துருவா திரைப்படம் இன்று(டிசம்பர் 8) ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரைக்கு வந்துள்ளது. ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் துருவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ராம் சரண், அரவிந்த் சாமியுடன் நடிக்க முதலில் பயந்ததாகவும், தன்னுடன் இயல்பாக பழகிய அரவிந்த் சாமி, தனது பயத்தைப் போக்கி தன்னை நெருங்கிய நண்பராக ஏற்றுக் கொண்டதாகவும் ராம் சரண் கூறியுள்ளார். ப்ரூஸ் லீ படத்தின் தோல்வியால் துவண்டிருந்த தனக்கு தனி ஒருவன் புதிய உற்சாகம் கொடுத்து தெலுங்கில் ரீமேக் செய்ய தூண்டியதாகக் கூறியுள்ள ராம் சரண் இப்படம் தெலுங்கிலும் நிச்சய வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.