கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார், வடக்கத்திய சிவாஜி. தற்போது 93 வயதாகும் அவர் மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், அதற்கான சிகிச்சைக்கு எடுத்து கொண்ட பிறகு பூரண நலம் பெற்று வீடு திரும்பினார். தற்போது அவருக்கு கால்கள் வீங்கி உள்ளன. அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவருக்கு திடீரென கடுமையான காய்ச்சலும், மூச்சு திணறலும் ஏற்பட்டது. உடடினயாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
திலீப்குமாரின் மனைவி சாய்ரா பானு இதுபற்றி கூறும்போது... "அவர் தற்போது நலமாக இருக்கிறார். டாக்டர்களின் சிகிச்சையாலும், ஆண்டவனின் அருளாலும் அவர் இப்போது பழைய நிலைக்கு திரும்பிவிட்டார். அவரது பிறந்த நாளை (வருகிற 11ந் தேதி) அவர் நிச்சயம் கொண்டாடுவார். ரசிகர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.