'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தமுறை கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டும்போலத்தான் தெரிகிறது. ஆரம்பத்தில் முதல் ஆளாக துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக அறிவிக்கப்பட்டது.. இந்தப்படத்தை இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹனீப் அதேனி என்கிற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள 'தி கிரேட் பாதர்' கிறிஸ்துமஸ் ரிலீஸாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜன-27க்கு பின் வாங்கியது... அதேபோல திலீப்பின் 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' படமும் போட்டியில் இருந்து விலகிக்கொண்டது.
அதேசமயம் 'வெள்ளிமூங்கா' ஹிட் பட இயக்குனரான ஜிபு ஜேக்கப் டைரக்சனில் உருவாகி இருக்கும் மோகன்லாலின் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படமும் பிருத்விராஜின் ஹாரர் த்ரில்லரான 'எஸ்ரா' படமும் இணைந்து மும்முனை போட்டி என்கிற சூழலை உருவாகின. இப்போது லேட்டஸ்ட்டாக சித்திக் டைரக்சனில் ஜெயசூர்யா நடித்துள்ள 'பக்ரி' படமும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. ஆக கிறிஸ்துமஸ் பண்டிகையில் நான்கு முனைப்போட்டி என்பது இப்போதே உறுதியாகியுள்ளது.