மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர். இவரின் ஆஸ்தான நாயாகியாக இருந்தவர் நடிகை கஜோல். இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் இந்த நட்பில் தற்போது விரிசல் ஏற்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. பேஷன் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவின் 50-வது பிறந்தநாளையொட்டி கரண் ஜோகர் டிச.,5-ம் தேதி விருந்து கொடுத்தார். இதில் தனது பாலிவுட் நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தார், ஆனால் கஜோலை மட்டும் கரண் அழைக்கவில்லை. இதுப்பற்றி விசாரித்ததில் சமீபத்தில் கரணின், ஏய் தில் ஹே முஷ்கில் படமும், கஜோலின் கணவர் அஜய்யின் சிவாய் படமும் ஒரே தேதியில் ரிலீஸானது. இதில் ஏற்பட்ட சிறு பிரச்னையின் காரணமாகவே கரண், கஜோலை விருந்துக்கு அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.