ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளி சுவாதிஷ்டா கிருஷ்ணன். பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஒருமுறை லிங்குசாமியை பேட்டி எடுக்கச் சென்றபோது "சினிமாவில் நடிக்கிறீங்களா?" என்று கேட்டிருக்கிறார். அப்போது மறுத்து விட்டு வந்துவிட்டார். ஒருமுறை மிஷ்கினை பேட்டி எடுத்தபோது "நான் சவரக்கத்தி என்ற படத்தை தயாரிக்கிறேன். அதில் நடிக்கிறீங்களா?" என்று கேட்டிருக்கிறார். அது இரண்டு குழந்தைக்கு தாய் கேரக்டர் என்பதால் மறுத்துவிட்டார். பின்னர் இன்னொரு கேரக்டர் இருக்கிறது என்று சொன்னபோது உடனே ஓகே சொல்லிவிட்டார். இப்படியாக சுவாதிஷ்டாவை சினிமா நடிகை ஆக்கிவிட்டார்கள்.
முதல் படம் வெளிவருதற்கு முன்பே தற்போது மதம், கீ, அசோக் செல்வன் இயக்கும் படம் என 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். "சின்ன வயசுல விளம்பர படங்கள்ல நடிச்சிக்கேன். மிஷ்கின் சார் கேட்டதும் மறுக்க முடியவில்லை நடிக்க ஒப்புக்கிட்டேன். ஆனா நடிக்கிறதுல குடும்பத்துக்கு அவ்வளவா பிடிக்கல குறிப்பா அப்பாவுக்கு. என்றாலும் நன்றாக நடித்து அவுங்க மனசை மாத்திடலாமுன்னு நம்பிக்கை இருக்கு. நல்ல கேரக்டர்களை தேடிப்பிடித்து நடிப்பேன். கிளாமராக நடிக்க மாட்டேன்" என்கிறார் சுவாதிஷ்டா.