ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூர்யா தற்போது நடித்து வரும் சிங்கம் 3 படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:
நான் சினிமாவில் அறிமுகமானபோது சிங்கம் மாதிரி ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பேன் என்று கனவுகூட கண்டதில்லை. போலீசாக மக்கள் நம்மை ஏற்பார்களா என்ற தயக்கம் இருந்துது. காக்க காக்க படத்தில் என்னை போலீசாக நடிக்க வைத்து மக்கள் ஏற்றுக் கொள்ள வைத்தார் கவுதம் மேனன். அதன்பிறகு ஹரி. அவருடன் இதுவரை 5 படங்களில் இணைந்து பணியாற்றி விட்டேன். பாலச்சந்தர், பாரதிராஜா காலங்களில் ஒரு இயக்குனர், நடிகரும் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது சாத்தியமாக இருந்தது, இப்போது அப்படி இல்லை. ஆனாலும் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இனியும் பணியாற்றுவோம்.
சிங்கம் படத்தை ஆரம்பித்தபோத இதன் இரண்டாம்பாகத்திலும் நடிப்பேன் என்று எதிபார்க்கவில்லை, இரண்டு பாகமுமே வெற்றி பெற்றது. ஹரி வெகுஜன மக்களின் ரசனைக்காக படம் எடுப்பவர். தான் இயக்கும் ஹீரோக்களை முதலில் அவர் ரசிப்பார். மக்களும் ரசிக்கிற மாதிரி அவர்களின் கேரக்டர்களை வடிவமைப்பார். இப்படித்தான் என்னை அவர் வடிவமைத்தார். சிங்கம் 3ம் பாகம் யோசனை வந்தது. ஆனால் சில வருடங்களுக்கு பிறகு பண்ணலாம் என்று நினைத்திருந்தோம். வேறு கதையில் நடிப்பதாகத்தான் இருந்தது. திடீரென்று ஒரு நாள் ஹரி வந்து சிங்கம் 3 பண்ணலாம். அதற்கு ஒரு ஒன்லைன் கிடைத்திருக்கிறது என்றார். அந்த ஒண் லைன் எனக்கும் பிடித்திருந்தது உடனே ஓகே ஆனது.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் என்.டி.ராமராவும் முதல்வராக இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. தமிழ்நாட்டு போலீசார் ஆந்திராவுக்கு சென்று அதை சரிசெய்தார்கள். இது இரு மாநில முதல்வர்களும் எடுத்த முடிவு. அதை அடிப்படையா வைத்துதான் சிங்கம் 3 உருவானது, முந்தைய இரு பாகங்களை விட இதில் கூடுதலாக பல விஷயங்களை சேர்த்துள்ளோம். குறிப்பாக இந்த பகுதியில் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்கிறேன். சிங்கம் 3 தமிழக ரசிகர்களுக்கு நிச்சயம் நிறைவைத் தரும். என்றார் சூர்யா.