'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு எக்மோரில் உள்ள 5 நட்சத்திர அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வருவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இதுபற்றித்தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் நயன்தாரா தற்போது யாருக்கும் ஜோடியாக இல்லாமல் தனித்த ஹீரோயின் கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதே திருமணம் ஆகிவிட்ட காரணத்தால்தான். அவர் நடித்து வரும் அறம், டோரா, கொலையுதிர் காலம் படங்களில் அவர்தான் முக்கிய கேரக்டர், ஹீரோக்கள் யாரும் கிடையாது. காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் ஜோடியாக அவர்தான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நடிக்கவில்லை.
திருமணத்தை அறிவித்து விட்டால் அதன் பிறகு நடிக்க வேண்டாம் என்று நயன்தாரா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இப்போது மார்க்கெட்ட இருக்கும்போதே நடித்து சம்பாதித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு படத்துக்கு 3 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா. திருமணத்தை அறிவித்து நடிப்பை கைவிட்டால் அதன் பிறகு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
"நயன்தாராவை பொருத்தவரை எதையும் கணித்துச் சொல்வது கடினம். நாளைக்கு விக்னேஷ்சிவன்கூட கழற்றி விடப்படலாம் என்கிறார்கள். காரணம் அவரின காதலர்களிலேயே அவர் அதிகம் நேசித்தது பிரபுதேவாவைத்தான். அவருக்காக இந்து மதத்திற்கு மாறினார். கையில் பெயரை பச்சை குத்திக் கொண்டார். ஒரே நாளில் விட்டு விலகினார். அதனால் நயன்தாராவைப் பொறுத்தவரை எதுவும் நிரந்தரமில்லை" என்கிறார்கள்.