இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கவலை வேண்டாம். படத்தின் கதையும், இரண்டை அர்த்த வசனங்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜீவா ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நான் இதுவரை 26 படங்களில் நடித்து விட்டேன். அதில் எத்தனை படங்கள் வெற்றி பெற்றது, எத்தனை படங்கள் தோல்வி அடைந்தது என்று எனக்குத் தெரியாது. அதுபற்றி எனக்கு கவலையும் இல்லை. எனக்கு பிடித்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறவன். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்.
சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. என்னை ஒரு நடிகனாக்கியது அமீர். ராம் படத்தில் என்னை நடிகனாக செதுக்கினார். அவர் மதுரைக்காரர் என்பதில் எனக்கு சந்தோஷம், மதுரை மக்களும், மதுரை கறிதோசையும் எனக்கு மிகவும் படிக்கும். மதுரை ரசிகர்களுக்கு ஒரு படம் பிடித்து விட்டால் அந்த படம் வெற்றி பெறும் என்பது என் கணிப்பு. என்றார் ஜீவா.