தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ப்ரீத்தி ஜிந்தா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார். இவரது உறவினரான நிதின் சவுகான், சிம்லாவின் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நிதின் சவுகன், சிம்லாவில் தனது காரில், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் தான் காரணம் என நிதின், தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நிதினும் அவரது மனைவியும் 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடந்துள்ளதாக கூறப்படுகிறது.