இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குனர் செல்வராகவன் இரண்டாம் உலகம் தோல்விக்கு பிறகு படம் இயக்காமல் இருந்தார். தற்போது நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்குகிறார். இதற்கு முன்பு அவர் விக்ரம் நடிப்பில் சிந்துபாத் என்ற படத்தை தொடங்கினார். இந்தப் படத்தை போக்கிரி, நம்நாடு, ராமச்சந்திரா, பரமசிவன் படங்களை தயாரித்த ஸ்ரீகனகரத்னா மூவிஸ் சார்பில் ரமேஷ்பாபு தயாரித்தார்.
ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்த நிலையில் செல்வராகவனுக்கும், விக்ரமிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட படம் டிராப் ஆனது. இதில் தயாரிப்பாளர் ரமேஷ்பாபுக்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இயக்குனர் செல்வராகவனுக்கு சம்பள முன்பணமாக ஒரு கோடி கொடுத்திருந்தார். படம் டிராப் ஆனதால் அந்த முன்பணத்தை தயாரிப்பாளர் ரமேஷ்பாபு திருப்பிக் கேட்டார். அதற்கு செல்வராகவன் எந்த பதிலும் தரவில்லை. இதனால் தற்போது தயாரிப்பாளர் ரமேஷ்பாபு செல்வராகவன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் தனது ஒரு கோடி ரூபாயை செல்வராககனிடமிருந்து வாங்கித் தருமாறு புகார் அளித்துள்ளார்.