டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபகாலமாக சின்னத்திரை பிரபலங்கள் அவ்வப்போது இணைய பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். அல்லது ரசிகர்களின் எதிர்ப்புக்கும் ஆளாகி விடுகிறார்கள். அந்த வகையில், சமீபகாலமாக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஏகப்பட்ட கலாய்ப்புகளுக்கு ஆளாகி மனசுடைந்து போயிருக்கிறார். இதனால் தற்போது அவர் சமூகவலை தளத்தை விட்டே வெளியேறி விட்டார்.
இந்த நிலையில், தற்போது விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினியும், இணைய பக்கத்தில் கருத்து வெளியிட்டு ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது, நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம், இந்தியாவிலுள்ள அனைத்து தியேட்டர்களிலும் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப் பட வேண்டும். அப்போது ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று அறிவித்தது.
ஆனால் இந்த புதிய சட்டத்தை சிலர் ஆதரித்தபோதும், பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில், விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, தியேட்டர்களில் தேசியகீதம் இசைப்பதை தான் வரவேற்பதாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரது இந்த கருத்துக்கு எதிராக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனபோதும் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை திவ்யதர்ஷினி.