‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகை வித்யா பாலன் தற்போது, தான் நடித்த கஹானி 2 படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இவர் தற்போது, பூஷண் குமாரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இந்த படத்தில் சுலோச்சனா என்ற சுலு என்கிற ஆர்.ஜே., கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இப்படத்தில் துமாரி சுலு என்ற நடுத்தர வயதினருக்கான நள்ளிரவு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆர்ஜே.,வாக வித்யாபாலன் நடிக்கிறாராம். இப்படத்திற்கு தும்மாரி சுலு என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை சுரேஷ் திரிவேணி என்ற விளம்பர பட இயக்குனர், இயக்குகிறார். இப்படத்தின் வேலைகள் ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளது. இப்படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். வித்யா பாலன் ஆர்ஜே.,வாக நடிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் லேகி ரஹோ முன்னா பாய் என்ற படத்தில் வித்யா பாலன் ஆர்ஜே.,வாக நடித்துள்ளார்.