பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம் 560 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் பிரமாண்டமாக நடந்தது. இதில் திரைப்பட நட்சத்திரங்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கின் நடன நிகழ்ச்சியும் நடந்தது.
நாட்டு மக்கள் 500க்கும், ஆயிரத்திற்கும் அலைந்து கொண்டிருக்கும்போது ஜனார்த்தன ரெட்டியால் 560 கோடி செலவில் எப்படி திருமணம் நடத்த முடிந்தது என்று புகார்கள் எழுந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் ஜனார்த்தன ரெட்டியின் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அதில் அவர்கள் திருமண செலவு விபரத்தை பார்வையிட்டார்கள். அதில் திருமணத்தில் நடனமாடிய ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு 1 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருப்பது தெரிந்தது. இந்த 1 கோடியை ராகுல் ப்ரீத்தி சிங் தனது வருமானத்தில் காட்டவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்கமாறு ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "எங்களுக்கு எந்த நோட்டீசும் இதுவரை வரவில்லை. எல்லாமே வதந்தி" என்று ராகுல் ப்ரீத்தி தரப்பில் கூறுகிறார்கள்.