ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகைகள் விசாகாசிங்கும், ப்ரியா ஆனந்தும் இணைபிரியா தோழிகள். 2013ம் ஆண்டு பஃக்ரி என்ற இந்திப் படத்தில் இணைந்து நடித்தார்கள். மிருங்தீப் சிங் லங்கா இயக்கிய இந்தப் படத்தில் புல்கிட் சாம்ராட் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் விசாகா சிங் டீச்சராக நடித்திருந்தார். ப்ரியா ஆனந்த் அவர் தோழியாக நடித்தார். இந்தப் படத்திற்கு பிறகுதான் இருவரும் நிஜத்திலும் தோழி ஆனார்கள்.
இப்போது பஃக்ரி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தில் நடித்தவர்களே மீண்டும் நடிக்கிறார்கள். விசாகா சிங்கும், ப்ரியா ஆனந்தும் மீண்டும் அதே கேரக்டரில் நடிக்கிறார்கள். தமிழில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்தார். அவரது தோழியாக விசாகா சிங் நடித்தார். இப்படி நிஜத்திலும், நிழலிலும் தோழியாக வலம் வருகிறார்கள் விசாகா சிங்கும், ப்ரியா ஆனந்தும்.