சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பாலிவுட்டின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை கஜோல். திருமணம், குழந்தை பிறப்பு என அடுத்தடுத்து இல்லற வாழ்வில் கவனம் செலுத்தியதால் சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த கஜோல், இப்போது குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகிவிட்டார். தற்போது இவர் ஒரு படத்தில் குழந்தைக்கு தாயாக நடிக்க இருக்கிறார்.
இதைப்பற்றி நடிகை கஜோல் கூறியிருப்பதாவது... ''உண்மை தான், நான் என்னுடைய அடுத்தப்படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க உள்ளேன். மிகவும் அருமையான கதை, இதில் எனது ரோலில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன். இப்படத்தை ஆனந்த் காந்தி இயக்கவில்லை. அவர் கதை மட்டும் தான் எழுதுகிறார். விரைவில் திரைக்கதை அமைக்கும் பணி நிறைவடைய இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
கஜோல் மீண்டும் ரீ-என்ட்ரியாக உள்ள படத்தை அவரின் கணவரும், நடிகருமான அஜய் தேவ்கன் தயாரிக்க உள்ளார். இப்படம் அடுத்தாண்டு துவங்க உள்ளது.