நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாலிவுட் நடிகை வித்யாபாலன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான சித்தார்த்ராய் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் வித்யாபாலன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு கணவன்-மனைவி இருவரையும் ஒன்றாக சேர்ந்து பார்க்க முடிவதில்லை. விழாக்களுக்கு தனித்தனியாக வருகிறார்கள். இதை வைத்து இருவரும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்ற செய்தி பரவியது. இதுகுறித்து வித்யாபாலன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
''நானும் சித்தார்த்தும் பிரியப் போவதாக வரும் செய்திகளை பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. சினிமாவில் பிசியாக இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டேன். அதற்காக சினிமாவை அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க முடியுமா? நான் என் பாதையில் பயணிக்கிறேன். சித்தார்த் அவர் பாதையில் பயணிக்கிறார். வீட்டுக்கு வந்தால் நாங்கள் கணவன், மனைவியாக இருப்போம்.
எங்களுக்குள் இருக்கும் அன்பை நாங்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொண்டால் போதும். விழாக்களில் இடுப்பில் கைபோட்டு ஜோடியாக நடந்து, செல்பி எடுத்து பேஸ்புக்கில் போட்டு, ஒன்றாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அதனை வெளி உலகத்துக்கு காட்ட வேண்டியதில்லை. நான் நடிகை, அவர் தொழிலதிபர், உலகம் எங்களை அப்படிப் பார்த்தால் போதும். கணவன், மனைவி என்பது எங்களுக்குள் இருக்கட்டும்'' என்கிறார் வித்யா பாலன்.