விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. தற்போது ஹாலிவுட் வரை சென்று விட்ட தீபிகா, அடுத்தப்படியாக சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் ‛பத்மாவதி' என்ற படத்தில் நடிக்க உள்ளார். தீபிகா, மும்பையில் கடந்த 2010-ம் ஆண்டு 4 படுக்கையறைகள் கொண்ட ஃப்ளாட் ஒன்றை வாங்கி இருந்தார். 26 வது மாடியில் அமைந்த அந்த ஃப்ளாட்டின் விலை சுமார் 36 கோடி என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த பிளாட்டின் அழகு சுற்றுச்சூழல் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் அவருக்கு பிடித்து போக இப்போது 30வது மாடியில் மேலும் ஒரு பிளாட் வாங்கியிருக்கிறார். இதன் விலை ரூ.40 கோடி என்று கூறப்படுகிறது. தன் தந்தை பிரகாஷ் படுகோனேவிற்காக இந்த வீட்டை வாங்கியிருக்கிறாராம் தீபிகா.
இந்த பிளாட்டில் உள்ள நீச்சல் குளம், பாட்மிட்டன் விளையாடும் இடம், நடைபயிற்சி மேற்கொள்ள ஏற்ற இடம் மற்றும் சூழல் உள்ளிட்ட பல விஷயங்கள் பிரகாஷ்க்கு மிகவும் பிடித்து போய்விட்டதால் தன் தந்தையின் ஆசைக்காக கூடுதலாக ஒரு பிளாட்டை தீபிகா வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.