மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த மஞ்சிமா மோகன் ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். ஒரே படத்தில் டாப்புக்கு வந்தார். அங்கு வெற்றி பெற்ற கையோடு தமிழில், கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு உடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமாகி தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் மஞ்சிமா, நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ....
* உங்களைப் பற்றி ?
என் பேர் மஞ்சிமா, கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்தேன். என் அப்பா விபன்மோகன், பிரபல ஒதிப்பதிவாளர்(100 படங்கள்). அம்மா வீட்டில் இருக்காங்க. அண்ணனுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு சின்ன குடும்பம். நான் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு 11வருடம் இடைவெளி. சமீபத்தில் ஹீரோயினாக , வடக்கன் செல்பி படத்தில் நடித்தேன். 100 நாட்களுக்கு மேல் படம் ஓடி ஹிட்டாச்சு, அந்த படம் டிரைலர் பார்த்து தான் கெளதளம் சார், அச்சம் என்பது மடமையடா படத்துக்கு அழைத்து வந்தார்.
* அச்சம் என்பது மடமையடா படம் பற்றி சொல்லுங்க ?
லீலா என்ற கேரக்டரில், ரொம்ப அமைதியான பொண்ணாக நடிக்கிறேன். படத்தில் என்னை பார்த்து பிறகு, நேரில் பார்த்த பலரை பார்த்த ஒரு அனுபவத்தை தரும்.
* சிம்புடன் அறிமுகமாகும் போது உங்கள் மனநிலை.?
சிம்புவுடன் நடிப்பதில் எந்த பயமோ, தயக்கமோ இல்லை. ஆனால் அப்பா, அம்மாவுக்கு இருந்தது. ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. நான் ஏன் சிம்புவோட மற்ற விசயங்களை பார்க்கணும், என்னோட வேலை என்னவோ அதை மட்டும் முடித்தால் போதும் என்று நினைத்தேன். இப்போது அப்படியில்லை, நான் என்னோட நிறைய விசையங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பராக சிம்பு உள்ளார்.
* பட ரிலீஸ், அறிமுக பதட்டம் இருக்கா.?
கொஞ்சம் இருக்கு, இந்தப்படம் ரிலீஸ் ஆவதில் பல தாமதங்கள், எப்பவும் போன் பண்ணி இந்த வாரம் வரும், கன்பார்ம் தானே என்று கேட்பேன். மேலும் தமிழ் ரசிகர்கள் எனக்கு எந்தளவுக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. ஒரு இரண்டு மூன்று நாள் நிச்சயம் டென்சன் இருக்கும்.
* படத்தில் வேற என்ன ஸ்பெஷல் ?
நண்பர்கள், அவர்களின் சகோதரி, குடும்பம்... அவர்கள் எப்படி பழகுகிறார்கள் என்று ஒரு யதார்த்தமான உறவை சொல்லும் படமாக இது இருக்கும். மிக துல்லியாமாக கவனித்து வசனங்களை சொல்லியிருக்கார் இயக்குநர், நிச்சயம் இந்த வசனங்கள் இளைஞர்களை கவரும். படத்திற்கு இரண்டு கேமராமேன்கள் ஒருவர் ஆஸ்திரேலியாக்காரர், இன்னொருவர் நம்மவர்.
* முதல்படம் வெளிவரும் முன்பே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது பற்றி.?
ஆமாம், விக்ரம் பிரபு உடன் முடிசூடா மன்னன், உதயநிதியுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன்.
* மலையாளத்தில் இருந்து ஏகப்பட்ட புதுமுக நடிகைகள் தமிழுக்கு வந்துள்ளார்கள், போட்டி பலமா இருக்கா.?
கீர்த்தி சுரேஷ் இப்போது நன்றாக ரீச் ஆகிட்டாங்க. அவரும், நானும் சிறு வயதில் இருந்தே பள்ளி தோழிகள், அவங்க அப்பாவும் என் அப்பாவும் நண்பர்கள். அவர், வெற்றி பெறுவது சந்தோஷம். மடோனா போன்ற பல நடிகைகள் இருக்காங்க, போட்டி கண்டிப்பா இருக்கும்.
* பேவரிட் ஹீரோ ?
எப்போதும் ரஜினி சார் தான் மாற்றம் இல்லை
* தமிழ் ரசிகர்கள் பற்றி ?
படம் பாருங்க, பார்த்துட்டு நான் தமிழில் நடிக்கலாமா, வேண்டாமா என்று அவர்களே முடிவெடுக்கட்டும். எனக்கு ஆதரவு கொடுங்க.
* அச்சம் என்பது மடமையடா படம் எந்த மாதிரியான படம்.?
இந்தப்படம் லவ் - ஆக்சன் படம், 2 பேரின் பயணம் தான், கண்டிப்பாக ஒரு பைக் முக்கியமான பங்காக இருக்கும். சென்னை, கன்னியாகுமரி, கேரளா, கோவா என பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ள படம் இது. கெளதம் மேனன் படங்களில் இருந்து இந்தப்படம் நிச்சயம் வித்தியாசமாக, புதுவிதமான படமாக இருக்கும், ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள்.
* கெளதம் படங்களில் பிடித்தது.?
விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வாரணம் ஆயிரம்.
* கெளதம் மேனன் செட்டில் எப்படி.?
எல்லோரிடமும் ஈஸியாக வேலை வாங்குபவர், எல்லா கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். குறிப்பாக முழு சுதந்திரம் கொடுப்பார். குழந்தை தனமா இருக்காத படத்தோடு ஹீரோயின் என்று அட்வைஸ் சொன்னார், மற்றபடி அவர் ஒரு அருமையான இயக்குநர்.
* ரகுமான் இசை. உங்க முதல் படத்துக்கு சொல்லுங்க .?
ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு பிடிச்ச பாட்டுனு ஒன்றை மட்டும் எடுத்து சொல்ல முடியாது எல்லாமே சூப்பர் பாடல்கள் படம் வரும் முன்னே ஒரு நடிகை அறிமுகம்,பொது இடங்களில் கிடைத்தது என்றால் அது தள்ளிப்போகதே பாட்டுக்கு தான், ரகுமான் சார் அருமையான பாடல்கள் கொடுத்திருக்கார் .