தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த பிரபல பாடகர் முகமது ரபி. இவரது ஷாகித் ரபி, இவர் கரண் ஜோகரை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். அதற்கு காரணமும் உள்ளது. கரண் ஜோகர் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. இந்தப்படத்தில் ஒரு டயலாக்கில் அனுஷ்கா சர்மா பேசும்போது, முகமது ரபி, பாட மாட்டார், அழுவார் என்று கூறியிருப்பார். இது அவரது மகன் ஷாகித் ரபியை கோபமடைய செய்துள்ளது.
இதுப்பற்றி ஷாகித் ரபி கூறியிருப்பதாவது... ‛‛என் அப்பா கரண் ஜோகரின் அப்பாவின் படத்தில் ஏராளமான படங்களை பாடியிருக்கிறார். நான் இன்னும் படம் பார்க்கவில்லை, ஆனால் இப்படியொரு டயலாக்கை வைத்திருப்பதன் மூலம் அவர் எவ்வளவு பெரிய முட்டாள் என்பது தெரிகிறது. அவருக்கு என் அப்பா முகமது ரபியை பற்றி தெரியாது, மிகவும் பிரபலமான பாடகர் அவர், எப்படி அவர் இதுபோன்றதொரு செயலை செய்தார் என்று தெரியவில்லை. கரணை எண்ணும்போது வெட்கமாக உள்ளது'' என்று தன் மனக்குமுறலை கொட்டியுள்ளார்.