ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வாழ்நாள் முழுமைக்குமான திருப்தியை நான் அடைந்து விட்டேன் என்று தனது 75வது பிறந்த நாளில் சிவகுமார் கூறினார். அவரது 75வது பிறந்த நாள் விழா கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிவகுமார் உணர்ச்சி தழும்ப பேசியதாவது: நான் ஓவியனாக வேண்டும் என்பதைத்தான் லட்சியமாக வைத்திருந்தேன். அதற்காகத்தான் சென்னை வந்தேன். ஓவிய கல்லூரியில் படித்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாதவை. அவை திரும்ப பெற முடியாதவை. நான் ஓவியம் வரைந்தது 14 வயது முதல் 26 வயது வரைதான். அதுதான் ஓவியனாக வாழ்ந்த காலம். இந்தியா முழுவதும் ஓவிய வெறியோடு அலைந்த காலம். அப்புறம் நடிகனாகிவிட்டேன். வேறு பாதையில் பயணித்து விட்டேன். ஆனாலும் ஆயுள் முழுவதும் நான் ஓவியனாக இருந்தாலும் எத்தனை ஓவியங்கள் வரைந்திருப்பேனோ அதை அத்தனையும் அந்த 8 வருடத்தில் வரைந்து விட்டேன். அத்தனை ஓவியங்களையும் நான் கைகளால் மட்டும் வரையவில்லை. இதயத்திலிருந்து வரைந்திருக்கிறேன். அதில் பூசப்பட்டிருப்பது வெறும் வண்ணங்கள் மட்டுமல்ல என் எண்ணங்கள்.
பத்திரிக்கை நண்பர்கள் எனக்கு எப்போதும் துணை நின்றிருக்கிறார்கள். இப்போது என் மகன்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். சூர்யாவின் காதலை பற்றி நிறைய எழுதினார்கள். அவர்கள் எழுதியபடியே திருமணம் நடந்தது. இப்போது இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதுவே எனக்கு போதும். இனி வரும் காலங்களில் காதல் திருமணங்கள்தான் இருக்கும். அரேன்ஜுடு மேரேஜ் என்பது மறைந்து விடும் என்று நினைக்கிறேன். ஆனால் முதல் நாள் திருமணம் செய்து மறுநாள் பிரிந்து விடுகிறார்கள் அதை நினைக்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது. என் வாழ்க்கை மேடு பள்ளம் நிறைந்ததாக இருந்தாலும். அதில் நான் மனப்பூர்வமான நிறைவடைந்து விட்டேன். நான் இல்லாவிட்டாலும் என் ஓவியங்களும், திரைப்படங்களும் என்னை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். இவ்வாறு சிவகுமார் பேசினார்.