10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
சின்னத்திரையிலிருந்து வந்த சந்தானம், சிவகார்த்திகேயன் ஆகியோர் ஹீரோக்களாக தமிழ் சினிமாவில் அசத்தி கொண்டிருக்க, ஹீரோயின்கள் வரிசையில் அந்த இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ், மலையாளம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் சுமார் 10 படங்கள் வரை நடித்து வரும் ஐஸ்வர்யா, இந்த தீபாவளிக்கு கடலை போட, ரசிகர்களை தன் ‛கடலை' படம் வாயிலாக அழைக்கிறார். இந்தப்படம் பற்றி அவரது அனுபவங்கள் இதோ...
கடலை படம் பற்றி சொல்லுங்க.?
இந்தப்படம் ரொம்ப ஜாலியாக இருக்கும், இரண்டு மணிநேரம் முழுவதும் சிரித்து கொண்டே இருக்கலாம். கொடி, காஷ்மோரா என இரண்டு பெரிய படங்கள் வெளிவருகிறது. அதோடு எங்களுடைய குட்டி படமான கடலையும் வருகிறது. சின்னப்படமாக இருந்தாலும் குடும்பத்தோடு அனைவரும் ஜாலியாக சிரித்து கொண்டாடி மகிழும் படமாக இருக்கும். கொடி, காஷ்மோரா படங்களுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் எங்கள் படத்தை வந்து பார்த்தால் நிச்சயம் ஏமாற மாட்டார்கள்.
அதென்ன படத்திற்கு கடலை என்று தலைப்பு, என்ன சொல்லவரீங்க.?
பொதுவாக எல்லோரும் போர் அடித்தால் கடலை சாப்பிடுவோம், அதுமாதிரி தான் எங்களுடைய படத்தை ரசிகர்கள் ஜாலியாக பார்த்து மகிழலாம். அவ்வளவு தான். அதேசமயம் ‛கடலை' படம் ஜாலியாக இருந்தாலும் அதில் ஒரு முக்கியமான விஷயமாக விவசாயத்தை பற்றி சொல்லியிருக்கோம்.
கடலையில் உங்க ரோல் பற்றி சொல்லுங்க.?
‛கடலை' படத்தில் நான் விவசாய கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறேன். கிராமத்தில் வாழும் கொஞ்சம் மாடர்ன் பொண்ணு. மா.கா.பா. ஆனந்த் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படத்தில் எனக்கு அவருடன் டூயட் எல்லாம் இருக்கு. ஒரு பாட்டில் செம்மையாக ஆடியிருக்கிறேன்.
தமிழ் சினிமாவில் உங்க நிலை எப்படி இருக்கிறது.?
நான் பண்ணிய படங்கள் எல்லாம் அருமையான படங்கள், சற்றென்று முன்னேறி போய் விடுவதை விட படிப்படியாக முன்னேறி போக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னடா இந்த பொண்ணு இப்படியும் நடிக்குது, அப்படியும் நடிக்குது என்று சொல்கிறார்கள். என்னை பொறுத்தவரை எல்லா விதமான படங்களிலும் என்னை சோதித்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த மாதிரி தான் நடிக்கணும் என்று நிபந்தனை வைத்துள்ளீர்களா.?
அப்படியெல்லாம் கிடையாது. ஒரு நடிகை எந்த மாதிரி ரோலிலும் நடிக்க வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன். கடலை படத்தில் கொஞ்சம் கிளாமராகவும் நடித்திருக்கிறேன்.
ஹிந்தி படத்தில் நடிக்கிறீர்கள் அதைப்பற்றி சொல்லுங்க.?
ஆமாம், படத்தின் பெயர் டாடி. ஷூட்டிங்கே முடிந்துவிட்டது. மிகப்பெரிய படமாக உருவாகி உள்ளது. விரைவில் படம் ரிலீஸாக உள்ளது.
மொழி தெரியாத படத்தில் எப்படி நடித்தீர்கள்.?
உண்மை தான், மொழி தெரியாதது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் பயம் இருந்தது, பின்னர் போக போக அது சரியாகிவிட்டது, நானும் நல்லபடியாக நடித்து கொடுத்துள்ளேன். அவர்கள் என்னை நல்லபடியாக பார்த்து கொண்டார்கள். மிகவும் மதிப்பு கொடுத்தார்கள். ஹிந்தி தெரிந்த ஒருவரின் உதவியோடு நானே படத்தில் டயலாக் பேசினேன்.
சிவகார்த்திகேயன், சந்தானம்.... இந்த வரிசையில் நீங்களும் இணைந்துள்ளீர்கள், சின்னத்திரை கொடுத்த அடையாளம் பற்றி சொல்லுங்க.?
பொதுவாக இந்த துறைக்கு வர நிறைய எதிர்ப்புகள் இருக்கும். எனக்கும் இருந்தது, இந்த துறைக்கு வர நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறேன். நான் இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம் தான். கடுமையாக உழைத்தால், நிச்சயம் எல்லோராலும் மிகப்பெரிய நிலைக்கு வர முடியும்.
திடீரென்று ஸ்லிமாகிவிட்டீர்கள்...?
நடிகைக்கு உடல் தோற்றம் மிகவும் முக்கியம். நான் உடற்பயிற்சியை விட டயட் தான் அதிகம் மேற்கொள்வேன், அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது சிறிது உடற்பயிற்சியும் செய்வேன்.
இந்தவருடம் தீபாவளி எப்படி.?
அநேகமாக நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இந்தாண்டு தீபாவளி கொண்டாடுவேன் என்று நினைக்கிறேன். மலையாளத்தில் துல்கர் சல்மான் உடன் ஒரு படம் போய் கொண்டிருக்கிறது. வைதேகி என்ற கேரக்டரில் தமிழ் பேசுகின்ற மலையாள பொண்ணாக நடிக்கிறேன். இதுதவிர நிவின் பாலியுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன்.
எப்போது பெரிய நடிகர்களுடன் நடிக்க போகிறீர்கள்.?
கண்டிப்பாக நடிப்பேன், அதற்கான நேரம் வரும் என்று நம்புகிறேன்.