ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் கடந்து ஹாலிவுட்டிலும் நடிக்க தொடங்கிவிட்ட தீபிகா படுகோனே, இப்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ள ‛பத்மாவதி' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதனிடையே தீபிகா, இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், இந்தியா-சீனா கூட்டு தயாரிப்பாக உள்ள படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை தீபிகா மறுத்துள்ளார்.
இதுப்பற்றி தீபிகாவின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தில், தீபிகா, சித்தார்த் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் பரவி வருகிறது. இதுமுற்றிலும் பொய்யான தகவல், அவர் அடுத்தப்படியாக பத்மாவதி படத்தில் தான் நடிக்க தயாராகி வருகிறார், வேறு எந்தப்படத்திலும் அவர் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.