தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி படம் விரைவில் வெளிவருகிறது. அவர் தயாரித்து வரும் நெருப்புடா படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
இன்றைய சினிமா சூழ்நிலை கவலை அளிப்பதாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் சினிமா கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது. தொலைக்காட்சியில் சினிமா பார்த்த மக்கள் இப்போது செல்போனில் சினிமா பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இனி வருங்காலத்தில் தியேட்டர்கள் இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
தாத்தா சிவாஜி, அப்பா பிரபுவின் காலம் சினிமாவின் பொற்காலம். ஆனால் இப்போது அப்படியில்லை. இப்போது வெற்றிக்கு நிறைய போராட வேண்டும். கடுமையான போட்டியை சமாளிக்க வேண்டும். சும்மா நடித்துவிட்டு, ஆடிவிட்டு போக முடியாது. ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். அப்போதுதான் இங்கு வெற்றி கிடைக்கும்.
வீர சிவாஜியும், முடிசூடா மன்னனும் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இனி நடிக்கும் படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும். நான் தயாரிக்கும் நெருப்புடா படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. திறமையான புதுமுகங்களை எனது பேனரில் தொடர்ந்து அறிமுகப்படுத்துவேன். அன்னை இல்லம் தொடர்ந்து சினிமாவுக்காக உழைத்துக் கொண்டே இருக்கும். என்றார். பேட்டியின் போது பிரபு, ராம்குமார் உடன் இருந்தனர்.