டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வானவராயன் வல்லவராயன், நவரச திலகம் படங்களை அடுத்து மா.கா.பா.ஆனந்த் நடித்து வெளியாகயிருக்கும் படம் கடலை. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இப்படம் தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து மா.கா.பா.ஆனந்த் கூறும்போது, நான் நடித்த முதல் படம் வெற்றியாக அமைந்தநிலையில், நவரச திலகம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இருப்பினும் கடலை படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறேன். அதுவும் தீபாவளி அன்று தனுஷ், கார்த்தி போன்ற பெரிய நடிகர்கள் படங்களோடு என் படமும் வெளியாவதே எனக்கு பெரிய சந்தோசத்தைக் கொடுத்திருக்கிறது. மேலும், கடலை நல்ல ஜாலியான படம் என்பதால் இந்த படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரும் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேசுடன் நடித்தது நல்ல அனுபவமாக அமைந் துள்ளது. என்னை விட சீனியர் அவர். நிறைய படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த கடலை படத்திலும் அவர் அருமையாக நடித்துள்ளார். அதோடு, அவருடன் இணைந்து நடித்த காட்சிகளின்போது எனக்கு அவ்வப்போது நடிப்பு சொல்லிக்கொடுத்தார். அது பெரிய உதவியாக இருந்தது. அதனால் நாங்கள் நடித்துள்ள காட்சிகள் ரொம்ப நன்றாக வந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் மாதிரி திறமையான நடிகைகளுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறும் மா.கா.பா.ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரொம்ப பெரிய இடத்துக்கு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்.