தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் அஜய் தேவ்கன் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் ‛சிவாய்'. இப்படம் அக்., 28-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது. இதனால் படத்தின் இறுதிக்கட்ட ரிலீஸ் மற்றும் புரொமோஷன் வேலைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டு இருக்கிறார் அஜய். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜய் இடத்தில், பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் மோதும் சூழல் வந்தால் எப்படி சமாளிப்பீர்கள் என்று கேட்டபோது, தான் எந்த ஒரு பிரச்னையையும் தன் ஒற்றை விரலால் சமாளித்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அஜய் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛எனக்கு சினிமா துறையில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எனக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பார்கள். எனக்கு எதுவும் பிரச்னை என்றால் அவர்களின் உதவியை கேட்பேன், இல்லையென்றால் எப்படிப்பட்ட பிரச்னை என்றாலும், அது யாராக இருந்தாலும் என்னுடைய சிறிய விரல் கொண்டே சமாளித்து விடுவேன் என்று கூறியள்ளார்.
‛சிவாய்' படம், கரண் ஜோகரின் ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்துடன் மோத உள்ளது.