ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள படம் மெல்லிசை. ரஞ்சித் ஜெயக்கொடி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். சி.எஸ்.சாம் இசை அமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரபேல் ஸ்டூடியோ சார்பில் தீபன் பூபதி, ரத்தேஷ் வேலு தயாரித்துள்ளார்.
இந்தப் படம தயாராகி 2 ஆண்டுக்கும் மேலாகி விட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கு இருந்த சில பிரச்னைகள் காரணமாக வெளியாகாமல் உள்ளது. இதில் நடித்த காயத்ரியும் இந்தப் படம் வெளிவந்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இந்த நிலையில் படத்தின் தலைப்பை புரியாத புதிர்' என்று மாற்றி உள்ளனர். அதோடு படத்தை அடுத்து மாதம் வெளியிடவும் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
மெல்லிசை என்பது ஏதோ இசை தொடர்பான படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இது மனித உணர்வுகளை பேசுகிற படம், அதனால் தலைப்பை மாற்ற முடிவு செய்தார்கள். பல தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக புரியாத புதிர் என்ற தலைப்பு முடிவு செய்யப்பட்டது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய முதல் படத்தின் டைட்டில் இது. அதனால் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியை சந்தித்து அவரின் முறையான அனுமதி பெற்று படத்தின் தலைப்பை மாற்றி உள்ளனர்.