ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டார்களில் ஒருவரான அஜய் தேவ்கனின் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் இந்த தீபாவளி விருந்து படைக்க வரும் படம் ‛சிவாய்'. இப்படம் பற்றியும், இதில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் அஜய் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...
* ‛சிவாய்' படத்தை பற்றி சொல்லுங்க.?
முதலில் இந்தப்படம் பற்றி நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன், சிலர் இந்தப்படம் மதம் சம்பந்தப்பட்ட படம் என்று நினைக்கிறார்கள், ஆனால் நிச்சயம் அப்படி கிடையாது. சிவாய் என்றால் இறைவன் சிவனின் பெயர், அவ்வளவுதான். மற்றபடி அப்பாவுக்கும், மகளுக்கும் இடையேயான அழகிய உறவை சொல்லுகிற படமாக இருக்கும்.
* படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க.?
படத்தில் எனது பெயர் சிவாய். ஆனால் கடவுள் அல்ல, கடவுள் மீது மிகுந்த பற்று கொண்டவன். இந்தப்படத்தின் கேரக்டர் என் நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பது போன்று இருக்கும். ஏனென்றால் உண்மையில் நான் ஒரு சிவ பக்தன்.
* படத்தில் நடிகர், இயக்குநர் எப்படி உணர்ந்தீர்கள்.?
நடிகர், இயக்குநர் ஆகியவற்றுடன் படத்தின் தயாரிப்பாளரும் நான் தான். முதலில் சொன்ன இரண்டும் எனக்கு கஷ்டமாக தெரியவில்லை. ஏற்னவே நான் படம் இயக்கியுள்ளேன். ஆனால் ஒரு தயாரிப்பாளராக மாறிய போது தான் மிகவும் கஷ்டமான சூழ்நிலையை உணர்ந்தேன்.
* இது உங்களின் கனவுப்படம் என்று கேள்விப்பட்டோம்.?
இல்லை, சிவாய் படம் மட்டுமல்ல, நான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையுமே என் கனவுப்படமாகத்தான் பார்க்கிறேன். அதேசமயம் இந்தப்படம் உருவாக சுமார் இரண்டு ஆண்டுகள் ஆனது, படத்தில் அவ்வளவு பணிகள் இருந்தன. அதை டிரைலரில் பார்த்தபோதே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
* முதலில் நீங்கள் தான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தீர்கள், அதன்பின்னர் கரண் ஜோகரும் அறிவித்தார், இதனால் உங்களுக்கு ஏதேனும் கஷ்டமா.?
அப்படி சொல்ல முடியாது. என்னைப்போலவே மற்ற இயக்குநர்களும் விழாக்காலங்களில் படங்களை ரிலீஸ் செய்து அதில் ஆதாயம் பெற விரும்புவார்கள். அதேசமயம் தனிப்பட்ட முறையில் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். ஒருவேளை நான் என் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் முன்னர் யாரேனும் அதே தேதியில் ரிலீஸ் அறிவித்திருந்தார்கள் என்றால் நான் ஒதுங்கியிருப்பேன்.
* இன்றைக்கு சினிமாவின் நிலை எப்படியிருக்கிறது.?
நான் சினிமாவிற்கு வந்த புதிதில் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. ஹீரோக்கள் இடையே போட்டி, பொறாமை எதுவும் கிடையாது, அனைவரும் நண்பர்களாக இருந்தோம். இரண்டு, மூன்று ஹீரோக்கள் எல்லாம் சேர்ந்து நடித்த படங்கள் அதிகம் வந்தன. ஆனால் இப்போது சினிமாவில் அந்தமாதிரி ஆரோக்கியமான நிலை இல்லை.
* எந்த மாதிரி மக்களை நீங்கள் விரும்புகிறீர்கள்.?
பொதுவாக என்னை விமர்சிப்பவர்களை ரொம்ப பிடிக்கும். பொதுவாக என்னைப்பற்றிய நல்ல விஷயங்களையும், என்னை புகழ்ந்து கூறுபவர்களை விட என்னுடைய தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை எனக்க பிடிக்கும் ஏனென்றால் அப்போது தான் எதிர்காலத்தில் அந்த தவறை என்னால் திருத்தி கொள்ள முடியும். என் மகளை எனக்கு மிகவும் பிடிக்கும், அவள் என் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டுவார்.
இவ்வாறு அஜய் தேவ்கன் கூறியுள்ளார்.