ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், ஹந்தி, தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஹீரோயின்களில் இலியானாவும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் இவரது நடிப்பில் வெளியாகி வசூலை குவித்த படம் ‛ருஸ்டம்'. இப்படத்தில் இலியானா அக்ஷ்ய குமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதன் பிறகு இலியானா எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற இலியானா, பட வாய்பிற்காக யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன் என்றார்.
இதைப்பற்றி இலியானா மேலும் கூறியதாவது...."பாலிவுட்டில் நடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். கிடைத்த வாய்ப்பை நல்ல பயன்படுத்தி கொண்டால் அதை நம்மை உயர்த்தும், இல்லையென்றால் மொத்தமாக பாலிவுட் சினிமாவை விட்டே துரத்தி விடும். பட வாய்ப்பே இல்லை என்றாலும் கூட யாரிடமும் போய் வாய்ப்பிற்காக கையேந்தி (பிச்சை) நிற்க மாட்டேன் " என்றார்.
இலியானா, தற்போது ‛பாத்சாஹோ' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.