பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
தமிழ், ஹந்தி, தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஹீரோயின்களில் இலியானாவும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் இவரது நடிப்பில் வெளியாகி வசூலை குவித்த படம் ‛ருஸ்டம்'. இப்படத்தில் இலியானா அக்ஷ்ய குமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதன் பிறகு இலியானா எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற இலியானா, பட வாய்பிற்காக யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன் என்றார்.
இதைப்பற்றி இலியானா மேலும் கூறியதாவது...."பாலிவுட்டில் நடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். கிடைத்த வாய்ப்பை நல்ல பயன்படுத்தி கொண்டால் அதை நம்மை உயர்த்தும், இல்லையென்றால் மொத்தமாக பாலிவுட் சினிமாவை விட்டே துரத்தி விடும். பட வாய்ப்பே இல்லை என்றாலும் கூட யாரிடமும் போய் வாய்ப்பிற்காக கையேந்தி (பிச்சை) நிற்க மாட்டேன் " என்றார்.
இலியானா, தற்போது ‛பாத்சாஹோ' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.