இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பதுபோல, மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கேரளாவையே ஜுரம் பிடிக்க வைத்த மாதிரி, சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கிறது 'புலி முருகன்' படம்.. இன்னும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகள் தொடர்வதால் அதை சமாளிப்பதற்காக சில தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளை திரையிட்டு வருகிறார்கள்.. ரசிகர்களுக்கு சந்தோசம் தான்.. ஆனால் ஒரு சிலருக்குத்தான் இது பொறுக்காதே.. கோலம் பகுதியை சேர்ந்த ஒருவர் உடனே மனித உரிமை கழகத்திற்கு புகாரை தட்டிவிட்டார்.
அதில் தொடர்ந்து விதிமுறைகளை மீறி அதிக காட்சிகளை திரையிட்டு வருவதாகவும், இதற்காக வழக்கமான காட்சி நேரங்களை மாற்றி அமைத்து ரசிகர்களுக்கு சிரமம் தருவதாகவும். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதகாவும் அந்த புகாரில் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார். உடனே ஜெட் வேகத்தில் செயல்பட்ட மனித உரிமை கழகம் இந்த புகாரை அப்படியே கேரள அரசுக்கு அனுப்பி வைத்து இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. கேரளா அரசு இது குறித்து கொல்லம் முனிசிபாலிட்டி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது