பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ்த் திரையுலகத்தில் சில குறிப்பிட்ட ஹீரோயின்கள் அவர்கள் நடிக்கும் படங்களின் எந்த ஒரு விழாவிற்கும் கலந்து கொள்ள மாட்டார்கள். யாருக்காவது எப்போதாவது தோன்றினால் அது பற்றி விழா நடந்து கொண்டிருக்கும் மேடையிலேயே பேசுவார்கள். அதோடு, இனி விழாக்களுக்கு வராத அந்த ஹீரோயின்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கறாராகச் சொல்வார்கள். ஆனால், இதுவரை அப்படி யார் மீதும் எந்த ஒரு நடவடிக்கை எடுத்ததாக சரித்திரம் இல்லை.
நயன்தாரா இதுவரை தான் நடித்த படங்களின் விழாக்களுக்கு வந்ததேயில்லை. படத்திற்கான ஒப்பந்தம் போடும் போதே அதையும் குறிப்பிட்டேதான் அவர் ஒப்பந்தம் போடுவது வழக்கம் என்கிறார்கள். ஆனால், நயன்தாரா அவர் நடிக்காத ஒரு படத்தின் விழாவிற்கு ஒரு முறை வந்திருக்கிறார். அவர் மட்டுமல்ல கூடவே த்ரிஷாவும் அந்த விழாவில் கலந்து கொண்டார். அதுவும் அந்தப் படத்தைத் தயாரித்த ஆர்யாவுக்காக கலந்து கொண்டார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற 'அமரகாவியம்' படத்தின் இசை வெளியீட்டு விழா அது.
நேற்று நடைபெற்ற 'காஷ்மோரா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு நயன்தாரா வழக்கம் போல வரவில்லை. அவர் நடிக்கும் படங்களின் விழாக்களுக்கு அவர் வராததற்கு முக்கிய காரணம் இருக்கிறதாம். அப்படி அவர் கலந்து கொண்டால் அந்தப் படங்கள் ஓடாதாம், அதனால்தான் அவர் கலந்து கொள்வதை தவிர்க்கிறார் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு 'அமரகாவியம்' பட விழாவிற்கு ஏன் வந்தார். ஓ...அதனால்தான் அந்தப் படம் தோற்றுவிட்டதோ...?. வராததற்கு என்னவெல்லாம் சென்டிமென்ட் சொல்கிறார்கள்.