தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விளம்பர பட இயக்குனர் பி.சகாயசுரேஷ் இயக்கி உள்ள படம் கடலை. உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மா.பா.கா.ஆனந்த், ஐஸ்வர்யரா ராஜேஷ், யோகி பாபு, ஜான் விஜய், பொன்வண்ணன், உள்பட பலர் நடித்துள்ளனர். என்.ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், சி.எஸ்.சாம் இசை அமைத்துள்ளார்.
படம் தீபாவளி ரிலீஸ். படத்தை பற்றி இயக்குனர் பி.சகாயசுரேஷ் கூறியதாவது:
இது கிராமத்தை பின்னணியாக கொண்ட கதை. பொன்வண்ணன் ஒரு பாரம்பரிய விவசாயி. அவருக்கு விவசாயம்தான் உயிர். படித்த அவரது மகன் மா.பா.கா ஆனந்துக்கோ விவசாயம் பிடிக்காது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கிறார். அதே ஊருக்கு விவசாயம் பற்றி ஆய்வு செய்ய வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பொன்வண்ணனிடம் இருக்கும் நிலத்தை வாங்கி அதில் கட்டிடம் கட்ட நினைக்கிறார் அரசியல்வாதி ஜான் விஜய். இதனால் மா.பா.கா. ஆனந்துக்கு ஆசை காட்டி தன் கைக்குள் போட்டுக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை தியேட்டரில் வந்து பார்க்கலாம்.
இன்றைக்கு விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது. படித்தவர்கள் விவசாயத்தை படிக்காதவர்கள் செய்ய வேண்டிய வேலையாக நினைக்கிறார்கள். இப்படியே போனால் சில ஆண்டுகளில் தின்பதற்கு சோறு கிடைக்காது. அதனால் படித்தவர்களும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை காதல், காமெடி செண்டிமெண்ட் சண்டை கலந்து கமர்ஷியலாக சொல்கிறோம். என்கிறார் சாய்சுரேஷ்.