பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கபாலி படத்தின் புகழ்பெற்ற நெருப்புடா... பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜ். பீட்சாவில் தொடங்கி ஜிகிர்தண்டா, டார்லிங், காக்கி சட்டை, தெறி உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். கபாலியின் நெருப்புடா... உள்பட பல பாடல்களையும் பாடியுள்ளார். நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட அருண்ராஜா ராஜா ராணி, மான் கராத்தே, பென்சில், ரெமோ படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துள்ளார்.
முதன் முறையாக மரகத நாணயம் என்ற படத்தில் முழுநீள கேரக்டரில் நடித்துள்ளார். இதில் ஆதி, நிக்கி கல்ராணி ஹீரோ ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். ஏ.ஆர்.கே.சரவண் இயக்கி வருகிறார். படத்தில் நடிப்பது பற்றி அருண்ராஜா காமராஜ் கூறியதாவது:
முதல் முறையாக நான் ஒரு வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நரை முடியோடு தோன்றும் என்னுடைய கதாபாத்திரம் இந்த மரகத நாணயம் கதைக்களத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒலி மற்றும் குரல் தான் மரகத நாணயம் படத்தின் தனித்துவமான சிறப்பம்சம். ஆகையால், குரல் மாற்றி பேசும் என்னுடைய திறமை, இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இத்தகைய வலிமையான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு என்னை தேர்வு செய்த தயாரிப்பாளர் டில்லி பாபு சார் மற்றும் இயக்குனர் ஏ ஆர் கே சரவண் ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய திரையுலக வாழ்வில், இந்த மரகத நாணயம் சிறந்ததொரு அதிர்ஷ்ட கல்லாக விளங்கும் என முழுமையாக நம்புகிறேன் என்கிறார் அருண்ராஜா காமராஜ்.