ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை அடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் அச்சம் என்பது மடமையடா. அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தை இயக்குவதற்கு முன்பே இந்த படத்தில் கமிட்டாகி சில தினங்கள் நடித்தார் சிம்பு. ஆனால் எதிர்பாராதவிதமாக அஜீத்தின் கால்சீட் கிடைத்ததால் அந்த படத்தை இயக்க சென்று விட்டார் கெளதம்மேனன். சிம்புவும் அதற்கு விட்டுக்கொடுத்து, அந்த இடைவெளியில் வாலு படத்தில் நடித்து வந்தார். பின்னர் என்னை அறிந்தால் ரிலீசான பிறகு மீண்டும் அச்சம் என்பது மடமையடா படம் தொடங்கப்பட்டது.
அதையடுத்து வேகமாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கடைசியாக ஒரு பாடலை மட்டும் படமாக்க வேண்டியிருந்தபோது, கெளதம்மேனன்- சிம்புவுக்கிடையே சம்பள பிரச்சினையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் பின்னர் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா படவேலைகளில் இறங்கினார் கெளதம். இந்நிலையில் சில மாதங்களுக்குப்பிறகு சிம்புவுடனான கருத்து வேறுபாடு நீக்கப்பட்டு கடைசி பாடலிலும் அவர் நடித்துக்கொடுத்து விட்டார். அதனால் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது அச்சம் என்பது மடமையடா.
மேலும், ஏற்கனவே அப்படத்தின் முதல் டரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான தள்ளிப்போகாதே -என்ற பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேற்று அப்படத்தின் 2வது டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதையும் சிம்பு ரசிகர்கள் இணையதளங்களில் பெரிய அளவில் டிரென்ட் செய்து வருகின்றனர்.