மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாடகர்கள் கானா பாலா, கானா உலகநாதன், கானா அந்தோனி போன்றவர்கள் தான் தாங்களே பாடல்கள் எழுதி பாடி நடித்தும் வந்தனர். அந்த வரிசையில்,
கடந்த சில ஆண்டுகளாக அருண்ராஜா காமராஜூம் இணைந்திருக்கிறார். சில படங்களில் கேரக்டர்களில் நடித்திருக்கும் இவர், பல படங்களில் பாடல்கள் எழுதி பின்னணியும் பாடி வருகிறார். என்றாலும், சந்தோஷ் நாராயணன் இசையில் கபாலி படத்தில் எழுதிய பாடிய நெருப்புடா பாடல் அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தி விட்டது.
அதனால் இப்போது அவரது மார்க்கெட் சூடு பிடித்திருக்கிறது. கபாலிக்குப்பிறகு ரெமோ, வாகா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு என பல படங்களில் பாடல்கள் எழுதி பாடி வரும் அருண்ராஜா காமராஜ், நெருப்புடா ஹிட்டைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையில் பல புதிய படங்களில் பாடல் எழுதி பாடி வருகிறார். இதில் மரகத நாணயம் -என்ற படத்தில் ஒரு அதிரடியான பாடலை அவரை எழுதி பாட வைத்திருக்கும் சந்தோஷ் நாராயணன். இந்த பாடல் இன்னொரு நெருப்புடா என்று தன்னை சந்திப்பவர்களிடம் கூறி வருகிறார்.