அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
சிலருக்கு நாக்கிலேயே சனி உட்கார்ந்திருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு.. மலையாள இயக்குனர் ஜெயராஜுக்கும் அப்படி நாக்கிலேயே சனி உட்கார்ந்திருந்ததோ என்னவோ, இல்லையென்றால் ஊர் மொத்தமும் சமீபத்தில் வெளியான 'புலி முருகன்' படத்தில் மோகன்லாலின் நடிப்பை கொண்டாடும்போது, இவர் மட்டும் 'படத்தின் வெற்றிக்கு காரணம் டெக்னிகல் அம்சங்கள் தானே தவிர மோகன்லால் அல்ல என்கிற ரீதியில் கருத்து சொல்லியிருப்பாரா என்ன..? தமிழில் 'அன்னக்கிளி நீ வாடி' மற்றும் 'லஜ்ஜாவதியே' என இரண்டு சூப்பர்ஹிட் பாடல்களை தந்த சூப்பர்ஹிட் படமான '4 ஸ்டூடன்ஸ்' படத்தின் இயக்குனர் தான் இந்த ஜெயராஜ்..
ஆனால் தனது கருத்து வெளியானபின் நிலைமை இவ்வளவு சீரியஸாக மாறும் என ஜெயராஜ் எதிர்பார்க்கவில்லை.. சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் அவரை கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட ஆரம்பித்து விட்டார்கள்.. மழைக்காலத்தில் கதவை திறந்தால் ஈசல் கூட்டம் உள்ளே வருவதுபோல பேஸ்புக்கை திறந்தாலே அவருக்கு கண்டனங்கள் குவிந்தன.. இன்னொரு பக்கம் திரையுலக வட்டாரங்களில் உள்ள நண்பர்களிடம் இருந்தும் பிரபலங்களிடம் இருந்தும் அவரது செல்போன் பேட்டரி சார்ஜ் தீரும் அளவுக்கு வசைபாடுகளும் அறிவுரைகளும் நிரம்ப ஆரம்பித்து விட்டன..
ஒருகட்டத்தில் தான் பண்ணியது எவ்வளவு பெரிய தவறென்று உறைக்கவே, மோகன்லால் ரசிகர்களிடம் பேஸ்புக்கில் கையெடுத்து கும்பிட்ட போட்டோ ஒன்றுடன் அதிரடியாக மன்னிப்பு கேட்டு விளக்கம் ஒன்றை பதிவு செய்தார் ஜெயராஜ்.. அதில் தான் மோகன்லாலை பற்றி தவறாக ஏதும் கூற முற்படவில்லை என்றும், 'புலி முருகன்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதாரமே மோகன்லாலின் கடின உழைப்புதான் என சொல்லவந்ததாகவும் அது வேறு மாதிரி திரிந்துவிட்டது என்றும் சொல்லி சமாளித்திருக்கிறார்.