ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரம்மாண்ட வெற்றியை பெற்ற, பாகுபலி திரைப்படத்தை, ரசிகர்கள் ஏற்றதால், இரண்டாவது பாகத்தை தயாரிப்பது எளிதாக இருந்தது, என, இயக்குனர், எஸ்.எஸ்.ராஜமவுலி கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்ற, பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி, பாகுபலி - 2 படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
இதன்பின், அவர் பேசியதாவது: ஒரு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றால், அதன் இரண்டாம் பாகத்தை தயாரிப்பது எளிது; மக்களுக்கு ஏற்கனவே, திரைப்படத்தின் கதாபாத்திரங்களும், அடிப்படைக் கதையும் புரிந்திருப்பதால், அதன் வெற்றியும் உறுதியாகும்.
இருப்பினும், அதிரடி சண்டைக் காட்சிகளை படமாக்குவது, சவாலான விஷயமாக உள்ளது. பாகுபலி படத்தில், கட்டப்பா வேடம், பெரியளவில் புகழ் பெறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம், அடுத்தாண்டு, ஏப்ரலில் திரைக்கு வருகிறது.
இவ்வாறு ராஜமவுலி கூறினார்.