டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல மராத்தி நடிகை அஸ்வினி ஏக்போதே, வயது 44. அக்லெச்சே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். 2009ம் ஆண்டு மராத்தி படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
அஸ்வினி நாட்டியத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். தனியாக நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். இந்த நிலையில் அஸ்வினி நேற்று முன்தினம் புனேவில் உள்ள பாரத் நாட்டிய மந்திர் அரங்கில் நடந்த நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென நெஞ்சை பிடித்தபடியே... மேடையில் சுருண்டு விழுந்தார். இதனால் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேடையில் இருந்த மற்ற கலைஞர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அஸ்வினியை பரிசோதித்த டாக்டர்கள். அவர் ஏற்கெனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் மராத்தி சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஸ்வினி தேசிய விருது பெற்றபோது அளித்த பேட்டியில் உங்கள் ஆசை என்ன? என்ற கேள்விக்கு "நடனம் என்றால் எனக்கு உயிர். எனது உயிர் நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போதே போக வேண்டும்" என்று கூறியிருந்ததார். அதுபோலவே நடந்து விட்டது.